இதோபதேசம் – பக்தி

56. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பகவானைப் பக்தி பண்ணி வர வேண்டும். 57. ஏகாந்தத்திலிருந்து பகவானிடம் பேசுவது போலவே தனக்குத் தோன்றியவாறு புலம்பல் போல் பேச வேண்டும். 58. பகவானை நினைத்துப் பரவசம் கொண்டு ஆடிக் களி செய்ய வேண்டும். 59. மனதெனும் புஷ்பக் கொட்டிலில் அன்பென்னும் புஷ்பம் பறித்துப் பகவான் பாதங்களில் நிறைக்க வேண்டும். 60. நான் என்பது எழுந்தவுடன் பகவானை நினைத்து ஓலமிட வேண்டும்.

Leave a comment