இவள் பிறந்ததும், மேனகை இக்குழந்தையை விசுவாமித்திரரிடம் கொடுக்க அதைப் பார்த்தவுடன் விசுவாமித்திரருக்குத் தம் தபஸ் கெட்டுப் போனது ஞாபகம் வந்தது. உடனே அதிக கோபத்தோடும் வெட்கத்தோடும் அவர் குழந்தையைக் கவனியாமல் போக மேனகையும் தான் வந்த வழியே போயினாள். ஆதலால் குழந்தை தனிமையாய்க் காட்டில் விடப்பட்டது. கண்வ மஹரிஷி காட்டில் சகுந்தமென்னும் பறவைகளால் போஷிக்கப்பட்டு வளரும் இக்குழந்தையைக் கண்டு அதற்குச் சகுந்தலை என்று பெயரிட்டுத் தமது ஆசிரமத்தில் கொண்டு வந்து வளர்த்து வந்தார்.