ஸ்ரீ மஹாபாரதம் – ஆதிபர்வம் – இது வரையில் சகுந்தலை பொறுத்துக் கொண்டு எவ்வாறிருந்தாள்?

முன்பு அரசன் விட்டுப் போகும்போது அவள் கர்ப்பமாயிருந்தமையால் கொஞ்ச காலத்திற்கெல்லாம் மஹாபலம், தேஜஸ் முதலியவைகள் அமைந்த ஒரு புத்திரனை அடைந்தாள். அவனுக்கு ஆறு வயதாகும் வரையில் அவனது விளையாட்டுக்களையும், அவனது பல விசேஷங்களையும் பார்த்துக் கொண்டே அரசன் ஆளனுப்புவதை அவ்வளவு ஆவலோடு எதிர்பார்க்காது சீக்கிரத்தில் வந்து நம்மை ராஜ சேவகர்கள் அரசனிடம் கொண்டு போவார்கள் என்று இருந்தாள்.

Leave a comment