இதோபதேசம் – பக்தி

46. பகவானைச் சேரவேண்டுமென்று அழுது புரண்டு கதறவேண்டும். 47. எப்போதும் பகவான் நாமத்தையே மனதிலும் வாயிலும் உச்சரிக்க வேண்டும். 48. தானென்னும் பாவனை இல்லாமல் எப்போதும் அவனே இருக்கும்படி பக்தி பண்ண வேண்டும். 49. யதார்த்த பக்தர்களோடு கூடி ஆடிக்களிக்க வேண்டும். 50. தன் சுதந்தரத்தை எல்லாம் பகவானுக்கு கொடுத்து விட்டுத் தான் பரதந்திரனாக இருக்க வேண்டும்.

Leave a comment