விருஷ்ணி சிரேஷ்டராயும், பகவத் பக்தராயும் உள்ள உத்தவரை ஏகாந்தமாக அழைத்து நந்தகோகுலம் போய் தமது பிரிவாற்றாமையால் வருந்தும் கோபாலர்கள் கோபிகைகள் முதலியோரை ஞானோபதேசம் செய்து தேற்றி வரும்படி உத்தரவு செய்தார். உத்தவர் பகவத் பக்தர்களான கோகுலவாசிகளைக் காணும் பாக்கியம் தமக்கு வந்ததை எண்ணி ஆனந்த பரவசமாய் பகவான் உத்தரவைச் சிரமேல் தாங்கி மிகுந்த சிரத்தையுடன் புறப்பட்டு ஒரு சாயங்காலம் கோகுலம் வந்து சேர்ந்தார்.